Friday, April 14, 2017

விநாயகா வாஸ்துவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, April 10, 2017

நரசிம்ம ப்ரபத்தி

முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது,
ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.
தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை
48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின்
படத்தை வைத்து பூஜித்து வரவும்.
இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.
இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:
தமிழாக்கம்
1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Wednesday, April 5, 2017

இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’ ஓஷோவின் குட்டிக் கதை

வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம் உள்ளது. இன்பம் உள்ளது. இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்குகிறார்.
நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, "எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்" என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். "நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்." "உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்" என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில் தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.
சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில் உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்துவிட்டான். அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை நெருங்கினான். சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர் காலடியில் வைத்து, "ஐயா ஊர் ஊராக நான் சுற்றி வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்கவில்லை" என்றான். 
சாது அவனைப் பார்த்து, "உண்மையாகச் சொல்கின்றாயா? இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?", அதற்கு அவன் சோகமாக"ஆமாம் சுவாமிஉண்மையாகக் கிடைக்கவில்லை", நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும் நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது, எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான் என்றான்.
அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள் நிறைந்த அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான். "ஐயோ என் வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்.. காப்பாற்றுங்கள்!" என்று அந்தச் சாதுவை துரத்திக்கொண்டே சென்றான்."கொள்ளைக் கொள்ளை! நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்கொண்டே துரத்தினான். சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக் கேட்டு சாதுவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர். பின் அவர்களிடம் சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர மூட்டையுடன் வந்து அமர்ந்தான். தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி, "நன்றி இறைவா ! நன்றி" என்று ஆனந்தமாகக் கூறினான். அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும் மறந்துவிட்டான்.
சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம் கிடைத்ததா? என்று..
சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே இல்லை.. இதுவே முதல் முறை என்றான். சாது விளக்கினார் : ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம். அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம். முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு முன் அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.என்றார்..
வெற்றியை அனுபவிக்கத் தோல்வியை ருசிக்க வேண்டியது அவசியம்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Tuesday, April 4, 2017

யார் ஏழை

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்.
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்.
இதில் யார்_பணக்காரர்.
3'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால்வேண்டும் என்று கேட்கிறார், அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற, பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்.
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு  என்று டீ கடைக்காரரிடம் கேட்க, டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்.
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்  இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் , நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்  தொடக்கம் நாமாக இருப்போமே.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.  சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, April 3, 2017

பிரச்சனையை ஓரமாவைங்க..

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100
கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
இதோட சரியான எடை எனக்கும் தெரியாது.
ஆனா என்னோட கேள்வி அதுவல்ல
வாத்தியார் தொடர்ந்தார். இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
ஒண்ணுமே ஆகாது சார்
வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”
உங்க கை வலிக்கும் சார்
ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...
உங்க கை அப்படியே மரத்துடும் சார்
வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த டம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
இல்லை சார். அது வந்து...
எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்
எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும்.
ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Saturday, April 1, 2017

சுய புத்தியை இழக்காதே....!!

ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.
இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு குழந்தைகள் பிறந்தன.
மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது குடும்ப பாரம் விழுந்தது.
தன் இரு மகன்களையும் இரு கண்கள் போலவே காத்து வந்தாள்.
அவர்கள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும்வரை இரண்டு குழந்தைகளின் மீதும் ஒரே மாதிரியாகவே அன்பு செலுத்தி வந்தாள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். பெரிய மனைவியின் மகன் நன்கு படித்து புத்திசாலியாக விளங்க இளையவனின் மகனோ சோம்பேறியாக திரிந்து படிக்காமல் இருந்தான்.
மூத்தவள் இறந்து விட்டதினால் அவன் மூலம் பிறந்த மகனிடம் தந்தைக்கு பாசம் அதிகம்.
தினமும் அவனை தனியே அழைத்து பேசிய பின்தான் தூங்குவார்.
ஒரு முறை பக்கத்து வீட்டுப் பெண்மணி அவளிடம் கேட்டாள், 'முட்டாள்தனமாக இருவரையும் ஒன்றாகப் பார்க்கிறாயே,
பெரியவளின் மகன் நன்கு படித்து அறிவாளி ஆகி விட்டால் புத்திசாலியான அவன் குடும்பத்தைக் காப்பாற்றட்டும் என எண்ணி உன் புருஷனிடம் அத்தனை சொத்தையும் அவன் மீது எழுதி வைத்து விட்டால் என்ன செய்வாய்?
நீ அவனுக்கு அடிமையாகி விடுவாயே. அவன் உன் மகனை துரத்தி விட்டால் என்ன ஆகும் ?;
என்றெல்லாம் கூறி பயமுறுத்தினாள். மனதில் விஷம் இறங்க இளையவள் அன்று முதல் தன் மூத்தவளின் மகனை கொடுமைப்படுத்தத் துவங்கினாள்.
அந்த சிறுவன் பாவம் என்ன செய்வான்?.
அந்த ஊரில் ஒரு சன்யாசியான குரு தங்கி இருந்தார். எவருக்கேனும் பிரச்சனை என்றால் அவரிடம்தான் சென்று தீர்வு கேட்பார்கள். ஆகவே அந்த சிறுவனும் குருவிடம் சென்று அழுதான்.
குரு அவனுக்கு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி அன்று இரவு எப்போதும் போல 'இன்று எப்படி இருக்கிறாய்," என தந்தை கேட்க பேச்சு வாக்கில் மூத்தவன் மகன் கூறினான் ' இரண்டு தந்தைகள் உள்ள எனக்கு இந்த வீட்டில் எனக்கு பிரச்சனைதான். என்ன செய்வது?.
இரண்டு தந்தைகளா?….என்னடா உளறுகிறாய் எனக் கேட்க மகன் கூறினான், '
நான் ஏன் அப்பா உளற வேண்டும்;? நான் உண்மையைத்தான் கூறுகிறேன்" எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.
அதைக் கேட்ட தந்தை துணுக்குற்றான். மேலும் என்ன கேட்பது? மனைவி மீது சந்தேகம் வந்தது. இரண்டாவது தந்தையா? யார் அவர்? மனைவி கள்ளத் தொடர்பு வைத்து உள்ளாளா? மகனிடம் அதை எப்படி நேரில் கேட்பது?
இரண்டாவது மகனிடம் மெல்ல , இன்று போஸ்மேன் வந்தானா, இன்று அந்த நண்பர் வந்தாரா, அவன் வந்து எதுவும் தந்தானா என மறைமுகமாக யார் யார் வந்தனர் எனக் கேட்டான்.
அவன் தான் வீட்டில் இருந்தால்தானே தனக்கு யார் வருகிறார்கள் ,போகிறார்கள் எனத் தெரியும் என்று கூறிவிட்டான். ;இது தினமும் தொடர்ந்தது.
தினமும் எந்த விதத்திலாவது தனது மூத்த மகனிடமும் அவன் தன் மனைவியின் நடத்தைப் பற்றி கேள்வியை மாற்றி மாற்றிக் கேட்டாலும் மகன் தந்தது ஒரே பதில்தான்.
அதனால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. கணவன் மனைவிக்கு இடையே தகறாறு ஏற்பட, அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போனவள் அந்த ஊரில் தங்கி இருந்த குருவிடமே சென்று அழுதாள்.
அவர் அவளுடைய குடுப்பத்தைப் பற்றி விஜாரிப்பது போல நடித்துவிட்டு உனக்கு ஒரு தோஷம் உள்ளது. உன்னுடைய இராசிப்படி உன்னுடைய மூத்தவளின் மகன் மனம் மகிழ்வோடு இருக்குமாறு இருந்தால்தான் அந்த தோஷம் விலகி உன் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
இல்லை எனில் மூத்தவளின் ஆவி உன்னை சபித்துக் கொண்டே இருக்கும், உனக்கு அமைதி இருக்காது என்றார்.
அவளும் மறுநாள் தனது மூத்தவளின் மகனை அழைத்து வந்து அவன் தன் பின்ளை எனவும்,
அவனுக்கு எந்த விதமான கஷ்டமும் இன்றி பாதுகாப்பேன் எனவும் சத்தியம் செய்து கொடுத்து விட்டுச் சென்றாள்.
மறுநாள் முதல் மூத்தவளின் மகன் அவளால் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே இரண்டொரு நாளில் மீண்டும் மகனிடம் வேறு மாதிரியாக அதே கேள்வியை தந்தைக் கேட்க மகன் எரிச்சல் அடைந்தது போல தன்னைக் காட்டிக் கொண்டு கூறினான்
' என்ன அப்பா, தினம் தினம் இதையே கேட்கிறீர்கள். நான்தான் கூறி விட்டேன் அல்லவா. இந்த வீட்டில் இரண்டு தந்தை உள்ளனர் என.
என் அம்மாவின் கணவன் சாந்தமானவர்;. சித்தியின் கணவரோ கோபக்காரர்.
இருவருக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்'
எனக் கூற புத்தியில் அடித்தது போல உணர்ந்த தந்தையின் சந்தேகம் தீர்ந்தது. வீட்டில் அமைதி நிலவியது.
நீதி:- 🌹 🌿

பிறர் சொல்லைக் கேட்டு சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய். துன்பம் வராது
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677