Tuesday, January 31, 2017

கழு தை

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்
நன்றி மாலைமலர்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

உங்கள் உடல் மொழியை மேம்படுத்த சில குறிப்புகள்..!


👉முதலில் நீங்கள் நீங்களாய் இருங்கள் மற்றவரை போல் இருக்க எண்ணாதீர்கள் அது உங்களுடைய சுயத்தை அழித்துவிடும். அதுமட்டுமல்லாது பார்க்கவும் செயற்கையாய் தெரியும்.
👉யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்தே பேசுங்கள், ஆரம்பத்தில் இது சிரமமாய் இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும். நடந்தாலும் அமர்ந்தாலும் நிமிர்ந்தே நிலையிலேயே இருங்கள், குனிந்தாற்போல் நடப்பது உட்காருவது போன்ற உடல் மொழிகள் பார்ப்பவர்களுக்கு உங்கள் மேல் ஒரு தாழ்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும்.
👉எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள், அது உங்களை நிறைவாய் முழுதாய் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும்.
👉யார் உங்களிடம் பேசுகிறார்களோ அவர்களிடம் முழு கவனத்தையும் செலுத்துங்கள், அவர் பேசும்பொழுது அக்கம் பக்கம் பார்க்காதீர்கள் அவ்வாறு செய்தால் அவருக்கு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் ஏற்படக்கூடும்.
👉நடக்கும்பொழுதும், படியேறும்பொழுதும் தரையை பார்த்து நடக்காதீர்கள், நேராக பார்த்து செல்லுங்கள், சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் நீங்கள் நடக்கும்பொழுது உங்கள் தாடை தரையை நோக்கி இருத்தல் வேண்டும்.
👉ஒருவருக்கு கை கொடுக்கும் பொழுது நன்கு இறுக்கமாக பற்றி இரு குலுக்கு குலுக்குங்கள் அது உங்கள் மேல் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும்.
👉நாற்காலியிலோ, டேபிளிலோ அமர்ந்திருக்கும் பொழுது கை கால்களை ஆட்டாதீர்கள், அதேபோல் X அமைப்பில் உங்கள் கால்களை வைக்காதீர்கள். உங்கள் கால்களை அமரும் தொனியிலேயே வையுங்கள்.
👉இவற்றை நீங்கள் முதலில் பின்பற்றும் பொழுது மற்றவர்கள் நகைப்பார்கள் பின்னர் போகப் போக நீங்கள் இப்படித்தான் என்று விட்டுவிடுவார்கள். ஆகவே பிறரை பற்றி கவலைப்படாமல் முன்னேறுங்கள்.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, January 30, 2017

நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல !!

நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பற்றி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும் அது யாதெனில் ஒவ்வொரு ஆலயமும் அமைய பெற்ற இடமானது ஒரு அறிவியல் சார்ந்த அல்லது அறிவியலுக்கு நேர்மாறான ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எடுத்துக்காட்டாக திருநள்ளாறு, சிதம்பரம், போரூர் போன்ற இடங்களில் அமைய பெற்ற ஊர் மற்றும் ஆலயங்களை எடுத்துகொள்ளலாம்.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயங்களில் மூலவராக அமைக்கப்படும் சிலைகள் சாதாரண கல்லாக இருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலான கோவில்களின் மூலவர்கள் சிலாதோரணம், ஸ்படிகம், நவபாசனம், தசபாசனம், மாணிக்கம், மரகதம், ஐம்பொன், என்று இன்னும் கிடைபதற்கரிய பெயர் தெரியாத பலவிதமான பொருட்க்களால் செய்யப்பட்டவையே. அல்லது கதிர் வீச்சு சார்ந்த அறிவியல் உள்ள இடத்தில் மட்டுமே மூலஸ்தானம் அமைக்கப்படும்.
இப்படி அமைக்கப்பெற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்களும் மாறுபடுவதை காணலாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் கலக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருக்கும்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.
முன்னோர்கள் (சித்தர்கள்) குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று குறிப்பிட்ட பொருளால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நாட்கள் அதனை பிரசாதமாக சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.
ஆனால் இன்று கால மாற்றாத்தினால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
மீண்டும் சொல்கிறேன் நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

#நம்_முன்னோர்கள்_ஒன்றும்_மூடர்கள்_அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம்.
அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார் ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள் ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை என கேட்டார்.சிவன் சொன்னார் அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வாஎன அழைத்து சென்றார் கங்கைக்கரையினை அடைந்த சிவன் நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார் உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கஎன கூறினார்.உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். உடன் பார்வதி அன்னை அப்பா நீ பாவமே செய்யவில்லையா? என வினவினார். அவன் சொன்னான்எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மாஎன்றான்.முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை என சொல்லி அழைத்து சென்றார்

நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும்....
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

நல்லதை மட்டுமே விதைப்போம்

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே  ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்! பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க அவருக்காக மளிகைக்காரர்  எடைபோடஅதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது! அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே  இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்  கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி.அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார் இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க.ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன். இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது  "தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!  இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது! இது தான் உலகநியதி! நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும்,.தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,ஆனா.நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

மாத்தி யோசி

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. அப்பொழுது அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், பாக்கெட்டில் இருந்து சில சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான். பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.
அவன் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சிறுவனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் உண்டா? என்றுப் பார்க்க மீண்டும் அவ்விடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது.
சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதி இருந்தீர்கள்.எப்படி இப்போது நிறைய பேர் உதவி இருக்கிறார்கள் என்றான்.
இரண்டாம் வாசகத்தில் " இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை" என்று இருந்தது.
காரணம் என்னவெனில், இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவு படுத்துகிறது. அவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.
நீதி : உங்களுக்கு எது கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்றுக் காட்டுங்கள்.
எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்...

நன்றியுணர்வுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

உண்மையான துறவி யார்?

சென்னிமலை தண்டபாணி
சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடர் சுவாமி கல்யாணானந்தர். அவருக்கு 1900-ல் துறவு தீட்சை வழங்கியபோது, “கல்யாண், எனக்குக் குருதட்சிணையாகத் தர உன்னிடம் என்ன வைத்திருக்கிறாய்? என்றார். அவரோ இதோ என்னையே தருகிறேன். நான் தங்கள் அடிமை. தங்களின் கட்டளைப்படி எதைவேண்டுமானாலும் செய்கிறேன்என்றார்.
சுவாமிஜியோ, “இதுதான் எனக்கு வேண்டும். கொஞ்சம் பணம் தருகிறேன். ஹரித்துவாருக்குப் போ. நிலத்தை வாங்கு. குடிசைகளைக் கட்டு. மருத்துவ உதவியின்றிப் பலர் இறந்து போகிறார்கள். சாலையோரங்களில் எவராவது நோயுற்றுக் கிடந்தால் அவர்களைக் குடிசைக்குத் தூக்கிவந்து அவர்களுக்குப் பணிவிடைசெய். தொண்டுபுரிஎன்றார்.
தன் குருவின் கட்டளைப்படி கல்யாணானந்தர் ஹரித்துவாருக்கு அருகில் கன்கல் என்ற இடத்தில் குடிசைகளை எழுப்பினார். ஏழை எளிய நோயாளிகளுக்குப் பணிவிடை செய்துவந்தார். 1904-ல் சுவாமி நிச்சயானந்தர் அங்குவந்து சேர்ந்தார். இவர்கள் இருவரும் பிச்சையேற்று வாழ்ந்து தொண்டு புரிந்தார்கள். உள்ளுர் துறவிகளோ இருவரையும் தீண்டத்தகாதவர்களாகத் தோட்டி சுவாமிகள் என்று ஏளனம் செய்தார்கள்.
கைலாஷ் ஆசிரமத்தின் தலைவரும் மிகப்பெரும் ஞானியுமான சுவாமி தனராஜ்கிரி ஒருமுறை அந்த ஊருக்கு வந்தார். அவரைத் துறவிகளெல்லாம் வரவேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவரோ விவேகானந்தரின் சீடர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே. உங்களுக்கு அவர்களைத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள் ஆமாம் சுவாமி. பக்கத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தோட்டிச் சாமியார்கள்என்றார்கள்.
அப்படி என்ன செய்கிறார்கள்?” என்றார் கிரிமஹராஜ். எல்லா எடுபிடி வேலைகளையும் செய்கிறார்கள்என்றார்கள் சுற்றியிருந்த சாதுக்கள். எடுபிடி வேலைகளா? உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அவர்களின் மருத்துவமனைக்குப் போவதில்லையா?” என்று கேட்டார். போகிறோம் சுவாமி என்றார்கள். அங்கே போய் மருத்துவம் பார்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்களைத் தோட்டிச் சாமியார்கள் என்கிறீர்கள். முதலில் நேரில் சென்று அவர்களை விருந்துக்கு அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார் சுவாமிகள்.
துறவிகளில் ஒருவர் ஓடோடிப் போய் இருவரையும் விருந்துக்கு அழைத்தார். கல்யாணானந்தர் புறப்படச் சம்மதித்தார். ஆனால் நிச்சயானந்தர் மறுத்துவிட்டார். கிரி மஹராஜிடம் அவர்கள் வர மறுத்துவிட்டதைச் சொன்னார் அந்தத் துறவி. அவர்கள் இருவரும் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று போய்ச் சொல் என்றார் சுவாமிகள். மீண்டும் ஓடினார் அந்தத் துறவி. கல்யாணானந்தர், “சுவாமி தன்ராஜ்கிரி மஹராஜைப் புண்படுத்த வேண்டாம். நாம் அங்கு போவோம்என்று நிச்சயானந்தரிடம் சொன்னார். ஆனால் அவரோ எதற்காக அங்கே நாம் போக வேண்டும்? அவர்களை நம்பி நாமில்லை. இன்றைக்குப் பெரிய விருந்து தருவார்கள். நாளை அதே காய்ந்த ரொட்டியைத்தான் நாம் உண்போம் என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார்.
ஏமாற்றத்தோடு திரும்பிய துறவி நடந்ததை கிரி மஹராஜிடம் தெரிவித்தார். இப்பொழுது சுவாமிகள் தன் சீடரிடம் அவர்கள் வராவிட்டால் இங்கு விழாவும் கிடையாது விருந்தும் கிடையாது என்று போய்ச் சொல்லி எப்படியாவது அழைத்துவா என்றார். சீடர் ஓடிப்போய் நிலைமையை எடுத்துச் சொன்னார். நிச்சயானந்தர் இப்பொழுதும் மறுத்தார். ஆனால் கல்யாணானந்தரோ சுவாமி தன்ராஜ்கிரி மகராஜ் மிகப் பெரிய ஞானி. அவருடைய அழைப்பை நாம் ஏற்காமல் இருக்க வேண்டாம். அவருக்காகவாவது விருந்துக்குப் போவோம்என்றார். இருவரும் விருந்துக்குச் சென்றார்கள்.
மனம் மாறியது
கிரி மஹராஜ் வாசலுக்கே வந்து இருவரையும் வணங்கி வரவேற்றார். தன் இருபுறத்திலும் அவர்களை அமரவைத்தார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். பின் அனைவரையும் பார்த்துச் சொன்னார்: நீங்களெல்லாம் பெரிய துறவிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையான துறவிகள் என்றால் இவர்கள்தான். சுவாமி விவேகானந்தரின் கொள்கைப்படி மாற்றுக் குறையாத வாழ்க்கை வாழ்ந்து எளிய மக்களுக்குத் தொண்டு புரிகிறார்கள்.
நீங்களெல்லாம் நோயால் வதைபட்டபோது உங்களுக்குப் பணிவிடை செய்த இவர்களைப் பார்த்துத் தோட்டிச் சாமியார்கள் என்கிறீர்கள். வெட்கமாக இல்லையா? குழந்தையாக இருந்தபோது உங்களின் மலத்தைக் கழுவியது யார்? தாய்தானே? அவரைத் தீண்டத்தகாதவளாகச் சொல்வீர்களா ஒதுக்குவீர்களா?” என்று கடுமையாக வசைபொழிந்தார். அதோடு, இவர்கள் செய்த அவமானங்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினார். உடனே இருவரும் தயவுசெய்து அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் சுவாமி. எந்த அவமானத்திற்கும் மனதிற்குள் இடமளிக்கவில்லைஎன்றார்கள்.
தூற்றியவர்கள் மனம் மாறியது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை அன்றே உணர்ந்தார்கள்.

Keywords: சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் சீடர், நேரடிச் சீடர், சுவாமி கல்யாணானந்தர், துறவு தீட்சை, உண்மையான துறவி
நன்றி தி இந்து

B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677

விலை மதிப்பில்லா சொத்து

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...
மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான்.
மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு .
மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது .
மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த செல்வங்களை தந்திருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே?
எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.
அவன் தான் இறைவன்
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.
கடலில் உள்ள திமிங்கலத்திற்கு ஒரு நாளைக்கு 33 டன் அதாவது, 36,960 கிலோ மீன்களை உணவு வழங்குகிறார்.
உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை
வறுமையால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலரை
நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,
இன்னும் சிலர்களை
கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்" .
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்" .
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்.
எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்" .
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ மரித்த ஆத்துமாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ".
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவதற்கு உனக்கொரு உயிருள்ள இறைவன் இருக்கின்றான். எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" .
இறைவனுக்கு நன்றிவாஸ்து செலுத்து.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வி .
இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இரு.
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Saturday, January 28, 2017

#திருப்பதி_திருமலைக்கு_ஏன்_செல்லவேண்டும்

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும்
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி
வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது
நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால்
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.
ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, January 27, 2017

#மனித_உருவில்_வாழும்_கடவுள்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது.

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்)
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்.
ஹோட்டல் நடத்தும் பாட்டி : ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்.
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).
குழந்தை: சரி,அம்மாட்ட சொல்றேன்.போயிட்டு வரேன் பாட்டி .(குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்.
நான்: நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி.
பாட்டி : அட சாப்பாடுதானே பா , நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா, அதெல்லாம் குடுத்துடுவாங்க.என்ன கொஞ்சம் லேட் ஆகும்.எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது.
நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல
பாட்டி : குழந்தை கேட்டிருக்கும்.அதான் சார் அனுப்பி இருக்காங்க.நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல பா, நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும் பா, ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் பா முக்கியம்.
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது.
இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

பனை மரங்கள்

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?
கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன.
எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.
கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.
பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

சாதிக்க வேண்டுமா

வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் மனதில் துணிவு இருந்தால் போதும் எப்பொழுது வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

ரிலாக்ஸ்

ஒரு பள்ளிக்கூடம்.
ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.
மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.
3 & 6 & 12
&இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.
‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’
அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.
‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’
‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.
அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.
‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’
‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.
இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.
‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’
தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.
ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.
‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:
22 58 33 55.
உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.
‘‘சார், இதன் தீர்வு என்ன?’’
ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’
மாணவர்கள் அமைதியானார்கள்.
ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:
கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.
இரண்டாவது அறிவுரை:
ரிலாக்ஸாக இருங்கள்.
நண்பர்களே! இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

#கூடா_நட்பு_கேடாய்_முடியும்"

தவளையும் சுண்டெலியும் ஒரு குளக்கரையின் அருகில் இருந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. ஒருநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்று இவைகளைப் பார்த்து கொத்த வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.
தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. அந்த சமயம் தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைப் கண்ட பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது. நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.

B.V.SUBRAMANI
Vastu Consultant

98844 37677