Thursday, September 28, 2017

மன முதிர்ச்சி என்றால் என்ன?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

இந்த 12 ல் அட்லீஸ்ட் ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
WHATSAPP / MOB 9884437677

Wednesday, September 27, 2017

மகிழ்ச்சி மகிழ்ச்சி


அழகான  பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்
அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.
அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச்  சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக
வருடிக் கொடுத்தது.கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக
புன்னகைத்தேன்..!!! நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் மகிழ்ச்சி,  அது   அவளிடம்இல்லை. வாழ்க்கையின் அழகு என்பது  நீங்கள்
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள்
என்பதில் இல்லை...
உங்களால்அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வது அல்ல அது ஒரு முடிவு...
நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள்்என்பதில் இல்லை மகிழ்ச்சி
நீங்கள்யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
" மகிழ வைத்து மகிழுங்கள்
உலகமும் இறையும் உங்களைகண்டு மகிழும்..!!!
என்றும் மகிழ்ச்சியுடன் உங்கள்
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677

Saturday, September 23, 2017

தற்பெருமை மட்டும் கூடவே கூடாது


மனிதனுக்குள், நல்லதும் கெட்டதுமாக ஆயிரம் வகையான குணங்கள் புதைந்து கிடக்கும். ஆனால், தற்பெருமை மட்டும் கூடவே கூடாது. ஏன்?

வியாசரின் மகன் சுகபிரம்மர். "சுகம்' என்றால் "கிளி'. ஆம்..சுகபிரம்மர் கிளிமுகம் கொண்டவர். பிறந்தவுடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது. எள் முனையளவு கூட களங்கம் இல்லாத மனதுடையவராக இருந்தார்.
ஒருநாள் வியாசர், ""சுகபிரம்மா இங்கே வா,'' என்றார்.
""வருகிறேன்,'' என்று சுகபிரம்மர் மட்டுமல்ல, அங்கே நின்ற மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் "வருகிறேன்,'' என்றன. சுகபிரம்மருக்கு பெருமை தாங்கவில்லை.
"நான் வருகிறேன்' என்றேன். ஆனால், ஊரிலு<ள்ள மரம் மட்டைக்குள் கூட நான் இருக்கிறேன். நான் எவ்ளோ பெரிய ஆள்,'' என்று நினைத்தாரோ இல்லையோ ஞானம் போய்விட்டது.
""சுகா! தற்பெருமையால் ஞானம் இழந்தாய். நீ ஜனகரைப் பார்த்து உபதேசம் பெற்று வா,'' என்றார்.
சுகர் மிதிலாபுரிக்கு சென்றார். ராஜாங்கத்தில் இருந்தும், குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்த ஜனகரைச் சந்திப்பதற்காக வாயில் காப்பவனிடம் அனுமதி கேட்டார்.
""சுவாமி! இங்கேயே நில்லுங்கள்! நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். மன்னர் நீங்கள் யார் எனக் கேட்பார். என்ன சொல்ல வேண்டும்?'' என்றான்.
""சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்,'' என்றார்.
காவலன் உள்ளே ஓடினான்.
""மன்னா! சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் தங்களைக் காண வந்துள்ளார்கள். அனுப்பட்டுமா?'' என்றான்.
""அவர் நாலைந்து பேருடன் வந்துள்ளார். அவர்களை வெளியே விட்டுவிட்டு தனியே வரச்சொல்,'' என்றார்.
காவலனுக்கு புரியவில்லை.
""அவர் ஒருவர் தானே வந்துள்ளார். மன்னர் இப்படி சொல்கிறாரே!'' இருந்தாலும் எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? அவன் தலையைப் பிய்த்துக்கொண்டு, ""சுகர் அவர்களே! தாங்கள் அழைத்து வந்துள்ள நாலைந்து பேரை விட்டுவிட்டு மன்னர் தங்களை உள்ளே வரச்சொன்னார்,'' என்றான்.
""சரி...சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல்,'' என்றார்.
காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல, ""இன்னும் ஒரே ஒரு ஆள் இருக்கிறார். அவரை விட்டுவிட்டு வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
அவனுக்கு இன்னும் குழப்பம்.
""சுவாமி! தங்களுடன் இருக்கும் ஒருவரை விட்டு வரச்சொல்கிறார்,''.
""சரியப்பா! சுகபிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல்,'' என்றதும், அவனும் அங்கு போய் சொல்ல, ""அவரை உள்ளே வரச்சொல்,'' என்றார் ஜனகர்.
ஜனகர் அவரிடம் பேசவில்லை. மொட்டையடித்த ஒருவரை அழைத்து வரச்சொன்னார். அவனை அமரவைத்து தலையில் ஒரு தட்டை வைத்தார். தட்டில் எண்ணெ#யை ஊற்றினார்.
""டேய்! உடனே புறப்பட்டு ரதவீதிகளைச் சுற்றி விட்டு மீண்டும் இங்கே வா. தட்டு கீழே விழக் கூடாது. தட்டில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக்கூடாது. விழுந்தால், உனக்கு தலையிருக்காது,'' என்று எச்சரித்தார்.அவன் பயத்துடன் கிளம்பினான். செல்லும் வழியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கச்சேரி எல்லாம் நடந்தது. அவன் எதன் மீதும் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த கருத்தும் தட்டின் மேலேயே இருந்தது. அது கீழே விழாமல் பவ்யமாக நடந்து மன்னர் முன்னால் வந்து நின்றான்.
""ஓடிப்போ,'' என்றார் ஜனகர். அவன் தலை தப்பித்த மகிழ்ச்சியில் பறந்தான். ஜனகர் அப்போதும் சுகரிடம் பேசவில்லை.
ஆனால், ஒன்றைப் புரிந்து கொண்டார்.

"ஒருவனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலையில், சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது செலுத்தினான். அதுபோல, நாமும் மனதை அடக்கி, கடவுளின் மீது மட்டும் கருத்தைச் செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும்' என்ற உபதேசத்தைப் பெற்றவராக அங்கிருந்து கிளம்பினார்.

B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677

தடம்மாறியபழமொழிகள்

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,

நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.

சரியான பழமொழி :

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்....

B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677

Friday, September 22, 2017

யாருக்கு Happy & Healthy with Long life

Harvard University-யில் இருந்து ஒரு வயதான Professor, 75 ஆண்டுகளாக நடந்து முடிந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பகிர்ந்து கொண்டார். ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும் நீண்ட நாள் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆராய்ச்சி அது. கிட்டத்தட்ட 700மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் 15 வயது முதல் 90 வயது வரை,ஆராய்ந்துள்ளனர். இவர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஆராய்ச்சி முடிவு என்ன தெரியுமா??ஆரோக்கியத்துடனும்மகிழ்ச்சியுடனும் நீண்ட நாள் யார் வாழ்ந்தார்கள்???

அதிகமாக அலுவலகத்தில் உழைத்தவர்களா? இல்லை.

புத்திசாலித்தனமாக பணம் சேர்த்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களா? இல்லை.

தேர்தலில் நின்று, அரசியலில் ஜெயித்து நாட்டின் அதிபதி ஆனவர்களா? இல்லை.

கோயிலில் உட்கார்ந்து தியானம் செய்து, யோகா செய்து, கடவுளை தினமும் தொழுதவர்களா? இல்லை.

யாருக்குத் தான் Happy & Healthy with Long life இருந்தது??

"நல்ல" உறவுகள் அல்லது நண்பர்கள் ("Good" Relationship) யாருக்கெல்லாம் இருந்ததோ அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்தனர்! தனித்து இருப்பவர்கள் விரைவில் இறந்து போவார்கள்.

ஆகவே "நல்ல" உறவுகளை வளர்ப்பதில் முக்கியத்துவம் தருவோம். அலுவலகத்தில் hard work செய்து அற்ப ஆயுளில் போக வேண்டாம். பணத்தை அதிகம் தேடாமல், உண்மையான நல்ல நண்பர்களை பெருக்குவோம்!   

B.V.Subramani                     
Vastu Consultant
9884437677

Wednesday, September 20, 2017

தர்மம் சொல்லும் உண்மைகள்

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி', 'தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நல்ல நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு; உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்; சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும், நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற, சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை தேவையான நேரத்தில் சொல்லத் தயங்காதே..!!*


B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Tuesday, September 19, 2017

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்றுஅலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை
கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள்என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
கட்டியிருக்கலாம்...இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும்அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள்உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண்குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது.
என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை.ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம்
மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
எனத்தொடர்ந்து...இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...பெண் குழந்தைகளை
குல விளக்காக காத்தனர்... பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்படவாய்ப்பு இல்லை...ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று
கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள்தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்
உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின்குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தைவழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின்குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்
அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லைஎன்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,யாகம் செய்தாலும்,ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள். நன்றி

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Monday, September 18, 2017

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு.
இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Saturday, September 16, 2017

முடியாததென்ற ஒன்று இல்லை! - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு!


இவர் பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.
புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார்.
பிஸ்டல் ஷூட்டிங்கில், இவர் அத்தனை பிரபலம். ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பிஸ்டல் ஷூட்டிங்கில் மெடல் வெல்வதே லட்சியமாக வைத்திருந்தார்.
உலகத் தரம் வாய்ந்த பிஸ்டல் ஷூட்டராக இருந்த இவர், 1936ல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சார்ஜெண்ட்கள் கலந்து கொள்ளக்கூடாது என்ற விதி காரணமாக பங்கேற்க இயலவில்லை. அதன்பிறகு அந்த விதி தளர்த்தப்பட்டது. 1940ல் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தீவிர பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
ஆனால்....
1938.. ஒரு ராணுவப் பயிற்சியின்போது,வெடிகுண்டு வெடித்து இவரது வலதுகை பறிபோகிறது.
ஒரு மாதம் மருத்துவமனையில். பேரிழப்பு. வெளியே வருகிறார். அதன்பிறகு சிலகாலம் யார் கண்ணிலும் படவில்லை.
1939. ஹங்கேரியன் நேஷனல் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்கிறார். நண்பர்கள் அனைவரும் கட்டியணைத்துக் கொள்கின்றனர். வலது கை இழந்ததற்கு வருத்தத்தையும், வாழ்த்த வந்ததற்கு நன்றியையும் சொல்லிக் கொண்டிருந்தனர் நண்பர்கள். இவர் தீர்க்கமான குரலில் சொல்கிறார்.
நான் வாழ்த்த வரவில்லை. உங்களோடு போட்டிபோட வந்தேன்!
அப்போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது. யாருக்கும் தெரியாமல்.. வருடம் முழுவதும் இடதுகையில் ஷூட் செய்யப் பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் என்பது.
நடக்கிறது போட்டி. இடது கையால் ஷூட் செய்து போட்டியிடுகிறார் கரோலி. வெற்றி பெறுகிறார். ஆம்.. இழந்த கையைப் பற்றி மறந்து.. இருந்த கையால் பயிற்சி பெற்று அந்த சாம்பியன்ஷிப்பை வென்றார்.
ஒலிம்பிக் கனவு? அதை அணையாமல் அப்படியே வைத்திருந்தார். 1940 ஒலிம்பிக்கில் போட்டியிட நினைக்கிறார்.
மறுபடி ஒரு தடை.. ஆம்..
இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940 ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை. தளரவில்லை. 1944ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வோம் என்று பயிற்சியைத் தொடர்கிறார்.ம்ஹும். 1944 ஒலிம்பிக்கும் நடைபெறவில்லை.
அடுத்த ஒலிம்பிக் 1948தான்.
1938, தனக்கு 28 வயதிருக்கும்போது ஆரம்பித்த கனவு. 1948-ல் 38 வயது. புதிய புதிய போட்டியாளர்கள். இளம் போட்டியாளர்கள். என்ன செய்யலாம் என்ற கேள்வியே இல்லை கரோலிக்கு. அடுத்த நான்கு வருடங்களும் விடாமல் பயிற்சி மேற்கொள்கிறார். வருகிற இளைஞர்களுக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாது என்று முனைப்போடு பயிற்சி மேற்கொள்கிறார்.
1948 ஒலிம்பிக் லண்டனில் நடைபெறுகிறது.
உலகின் மிகச்சிறந்த வீரர்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்தப் போட்டியில், ஒரே கை.. அதுவும் இடது கையால் ஷூட்டிங் செய்கிறார் கரோலி டக்காக்ஸ். அந்தப்போட்டியில் அர்ஜெண்டினாவின் கார்லோஸ் என்ரிக்யூவும் களத்தில் இருக்கிறார். கார்லோஸ் உலக நம்பர் ஒன் சாம்பியன். கார்லோஸை இவரால் ஜெயிப்பது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி முடிகிறது. வெற்றியாளரை அறிவிக்கிறார்கள்.
ஆம். புள்ளிப்பட்டியலில் முதலிடம். கரோலி 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டில் வெல்கிறார்.தங்கம்!
உலகே திரும்பிப் பார்க்கிறது. அதோடும் விடவில்லை. அவர்.. அடுத்த 1952-ல் ஃபின்லாந்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் கலந்து கொள்கிறார். போட்டி போடுகிறார். தங்கம் வெல்கிறார். ஆம்.. தங்கம்!!
தொடர்ந்து அந்தப் பிரிவில் இரண்டு முறை தங்கம் வென்றவர் என்ற சாதனையைச் செய்கிறார் கரோலி.
அதற்குப்பிறகும் பல போட்டிகளில் கலந்து கொள்கிறார்.
இப்ப சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்... என்னால இது முடியல.. அது முடியல-ன்னு...
*நம்மால் முடியாதது எதுவுமே இல்லை*

*என்றென்றும் மிகுந்த மகிழ்ச்சியுடனும்*
*
தன்னம்பிக்கையுடனும் உங்கள் நண்பன்*

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Friday, September 15, 2017

புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை!

"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

"புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை!

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Thursday, September 14, 2017

கடை பிடிக்க வேண்டிய சிலவிஷயங்கள் !!

1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.

4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

7. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).

8. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

10. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

11. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

12. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

1. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

2. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

3. கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.

4. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

5. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

7. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).

8. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

9. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

10. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

11. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

12. வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

Saturday, September 2, 2017

மருத்துவ தலைமகன் தன்வந்திரி

வாலாஜாஅருளாளகிரிக்கும் (சோளிங்கர்), அஸ்திகிரிக்கும் (காஞ்சிபுரம்) நடுவே அமைந்துள்ளது ஔஷதகிரி எனும் தன்வந்திரி பீடம், கொங்கணர், அகஸ்தியர் விஜயம் செய்த பூமி, வேகவதி நதிபாயும் பூமி. மந்திரமே யந்திரமானதால் மந்திரமலை எனும் பெயர்கொண்ட பூமி. சித்தர்கள் வாழும் பூமி. மூலவர் தன்வந்திரி பகவான் (7.5 அடி உயரம்), தாயார் ஆரோக்கிய லட்சுமி எனும் திருப்பெயர்களிலும் உற்சவர் வைத்யலட்சுமி ஸமேத வைத்தியராஜன் எனும் திருப்பெயர்களிலும் திருவருட்பாலிக்கும் தலமே வேலூர் வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடம். தல விருட்சமாக புன்னை மரமும் தல தீர்த்தமாக வேகவதி நதியும் விளங்கும் திருத்தலம். இத்தலத்தில் சுக்கு, வெல்லம், தைலம் போன்றவைகளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலையில் முரளிதர ஸ்வாமி களால் தீட்சை பெற்றவர்கள் ஆலய சேவை புரிந்து கொண்டு வருகின்றனர்.முரளிதர ஸ்வாமிகள் பெற்றோருக்காக அமைத்த பீடம். தன்வந்திரி பகவான் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோல ஊர்வலம் செய்தபோது தரிசித்த பக்தர்கள்,147 ஹோமங்களில் பங்கேற்று பலனடைந்த பக்தர்கள் மற்றும் விகித ஜப வேள்வியில் பங்கேற்றவர்கள் என 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரமே யந்திரமான பீடம். ஷண்மதங்களுக்குரிய தெய்வங்கள் அமைந்த தலம். சுகப் பிரம்ம ரிஷி, அகஸ்தியர், வீர பிரம்மங்காரு, அருள் நந்தி போன்றோர்களின் ஓலைச்சுவடியில் இடம் பெற்ற தலம். 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாகவும், 73 சந்நதிகளுடன் பாரதமாதா, வாஸ்து பகவான் போன்ற தெய்வங்களுக்கு திருச்சந்நதிகள் கொண்ட தலம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி.கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவையுடன் தெய்வீக மருத்துவராக காட்சி தந்தார். மருத்துவப் பிதாமகனான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்ம வினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி அருள் ஒன்றே காப்பாற்ற வல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்கி ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் உண்டாகும். இவரே காக்கும் கடவுள் ஆவார். இத்தலத்தில் தன்வந்திரி பகவான் அட்டைப்பூச்சிக்கு பதிலாக சீந்தில் கொடியை ஏந்தி டாக்டர்களுக்கே டாக்டர் போல் ஸ்டெதஸ்கோப்புடன் அருட்காட்சியளிக்கிறார். தன்வந்திரிக்கு ஞாயிறு, வியாழன், சனிக்கிழமை போன்றவை உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. சுக்கு, வெல்லம், நல்லெண்ணெய், பச்சரிசி, வெண்ணெய், மூலிகைகள், மளிகை பொருட்கள், யாக பூர்ணாஹூதி வஸ்திரங்கள், தேன், நெய் போன்ற அபிஷேகப் பொருட்களை உபயமாக கொடுத்தலே இத்தல நேர்த்திக் கடனாக உள்ளது.லட்சுமி கணபதி, பாலமுருகன், குழந்தையானந்த சுவாமிகள், சூரியன், சந்திரன், சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமணர், புத்தர், தட்சிணாமூர்த்தி, வள்ளலார், மகா பெரியவர், ராகவேந்திரர், நவ கன்னியர், அத்ரி பாதம்,அனுசுயா தேவி, ஐஸ்வர்ய லட்சுமி கணபதி, பாரத மாதா, யக்ஞ சொரூபிணி, ஐஸ்வர்ய பிரத்தியங்கிரா, ஒரே கல்லில் அமர்ந்த கோலத்தில் தன்வந்திரி விநாயகர் என்று மொத்தம் எழுபதுக்கும் மேற்பட்ட சந்நதிகள் அமைந்துள்ளன. யாகங்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட தலமாக இது விளங்குகிறது. சண்டி யாகம், சூலினி துர்க்கா ஹோமம், பைரவர் ஹோமம், சிகப்பு மிளகாய் வற்றலுடன் மஹாபிரத்யங்கிரா தேவி யாகம், மஹாகாளி யாகம், கனகதாரா ஹோமம், மகாலட்சுமி யாகம், பூசணிக்காய் கொண்டு கூஷ்மாண்ட ஹோமம் என்றுஆயிரத்திற்கும் மேற்பட்ட யாகங்கள் நடைபெற்று வருகின்றன.. வேலூருக்கு அருகேயே வாலாஜாவில் இந்த தன்வந்திரி பீடம் அமைந்துள்ளது.
அன்புடன்
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677