Friday, January 27, 2017

#மனித_உருவில்_வாழும்_கடவுள்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது.

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்)
பாட்டி ...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்.
ஹோட்டல் நடத்தும் பாட்டி : ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்.
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).
குழந்தை: சரி,அம்மாட்ட சொல்றேன்.போயிட்டு வரேன் பாட்டி .(குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்.
நான்: நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க பாட்டி.
பாட்டி : அட சாப்பாடுதானே பா , நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல பா, அதெல்லாம் குடுத்துடுவாங்க.என்ன கொஞ்சம் லேட் ஆகும்.எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது.
நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல
பாட்டி : குழந்தை கேட்டிருக்கும்.அதான் சார் அனுப்பி இருக்காங்க.நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல பா, நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும் பா, ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் பா முக்கியம்.
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது.
இதை படிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இது போன்றவர்களை வாழ்கையில் கடக்க நேரிட்டால் உங்களால் ஆன உதவியை செய்து விட்டு வாருங்கள். சிறிய உதவி என்று எதுவுமே இல்லை. சரியான நேரத்தில் செய்யப்படும் எந்த உதவியும் ஞாலத்தினும் மானப் பெரிது !!
B.V.SUBRAMANI
Vastu Consultant
98844 37677

No comments:

Post a Comment